sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அழகெல்லாம் முருகனே!

/

அழகெல்லாம் முருகனே!

அழகெல்லாம் முருகனே!

அழகெல்லாம் முருகனே!


ADDED : ஜூன் 19, 2025 03:03 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகை விரும்பாதவர்கள் யாருமில்லை. பச்சைப் புல்வெளி கண்களுக்கு அழகு சேர்க்கிறது. அருவியின் குளிர்ச்சாரல் கண்ணுக்கும், மனதுக்கும் களிப்பூட்டுகிறது. நந்தவனத்தின் மெல்லிய பூங்காற்றும், பூத்துக்குலுங்கும் வாசனை மலர்களும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கின்றன. இப்படி இயற்கை அழகு எல்லாம் ஒன்று திரண்ட பேரழகன் மன்மதன். இவனுக்கு 'மாரன்' என்ற பெயருண்டு. இந்த மன்மதனை போல ஆயிரம் மடங்கு அழகு மிக்கவன் முருகன்.

முருகனின் அழகின் முன் மன்மதனின் அழகு ஏளனப் பொருளாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு 'குமாரன்' என்ற பெயர் உண்டானது. 'கு' என்பது 'அதிகப்படியான' என்ற பொருளில் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாரன் (மன்மதன்) கருமை நிறம் கொண்டவன். அதனால் மன்மதனை கருவேள் என்பர். குமாரன் (முருகன்) சிவந்த நிறமுடையவன் என்பதால் செவ்வேள் என்பர். ஆயிரம் கோடி மன்மதனின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்தது போல முருகன் திகழ்வதாக கந்தபுராணம் கூறுகிறது.






      Dinamalar
      Follow us