sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பெற்றோரின் கடமை

/

பெற்றோரின் கடமை

பெற்றோரின் கடமை

பெற்றோரின் கடமை


ADDED : ஜூன் 20, 2025 08:28 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 08:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'புண்ணியம் செய்வாருக்கு பூவுண்டு நீருண்டு' என்கிறது திருமந்திரம். புண்ணியம் இருந்தால் மட்டுமே பகவானுக்கு அபிஷேகம் செய்து பூவால் அர்ச்சனை செய்யும் பாக்கியம் கிடைக்கும்.

புண்ணியம் என்றால் நல்லதை நினைப்பது, சொல்வது, செய்வது. பாவம் என்றால் கெட்டதை நினைப்பது, சொல்வது, செய்வது. 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்கிறார்கள் அருளாளர்கள். கடவுளுக்கு சேவை செய்திட புண்ணியமே உதவுகிறது.

சவுந்தர்ய லஹரியின் முதல் ஸ்லோகத்தில், 'புண்ணிய பலனின் காரணமாகவே இந்த நுாலை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் எப்படி நீ கற்க முடியும்' எனக் கேட்கிறார் ஆதிசங்கரர்.

நாராயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரியும் முதல் ஸ்லோகத்தில், 'குருவாயூரப்பன் மகிமையை புண்ணியம் செய்தால் மட்டுமே கற்க முடியும்' என்கிறார்.

இதன் மூலம் ஸ்லோகங்களை முழுமையாக நாம் படிப்பதற்கு சங்கரரும், நாராயண பட்டத்ரியும் ஊக்கப்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட விஷயங்களை இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமை.

-லட்சுமி பாலசுப்ரமணியன்






      Dinamalar
      Follow us