
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னோருக்கு நாம் கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை சேர்ப்பவர் சூரிய பகவான். அதனால் சூரியனுக்கு 'பிதுர் காரகர்' என்றும் பெயருண்டு. அமாவாசையன்று தீர்த்தக் கரைகளில் நீராடும் போது கைகளால் நீரை அள்ளி கீழே விடுவது நன்மையளிக்கும். இதற்கு அர்க்கியம் என்று பெயர்.
புனித நதிகளில் நீராடும் போது முழங்கால் அளவுக்கு நீரில் நின்றபடி சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்ய ஆயுள் அதிகரிக்கும். உடல்நலம், ஆத்மபலம் ஏற்படும். தந்தை, மகன் உறவு பலமாகும்.