ADDED : அக் 17, 2025 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர். ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு முழுவதும் விழித்து நரகாசுரனுடன் போரிட்டு வென்றார் கிருஷ்ணர். இதனால் இந்நாளுக்கு 'நரக சதுர்த்தசி' என்றும் பெயருண்டு. சிவராத்திரி சிவனுக்குரியது என்றாலும், ஐப்பசியில் பெருமாளுக்கும் உரியதாக உள்ளது. கிருஷ்ணர், சிவன் இருவரையும் வழிபட ஏற்ற நாள் இது.