ADDED : டிச 11, 2025 12:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்கழியில் வாசலில் இடும் கோலத்தில் பூசணிப்பூ வைப்பர். அதிலுள்ள தேனைக் குடிக்க வண்டுகள் வட்டமிடும். அதை வேடிக்கை பார்ப்பதற்காக குழந்தைகள் கோலத்தைச் சுற்றி அமர்வர். அவர்கள் பசும்பாலை கிண்ணத்தில் வைத்திருப்பர்.
கீழ்வானில் உதித்த சூரியன் பிரகாசிக்கத் தொடங்கும் போது சிறிது பாலை பூக்களில் ஊற்றி சூரியனுக்கு நைவேத்யம் செய்வர். மீதி பாலை குழந்தைகள் குடிப்பர். உச்சிப் பொழுதானதும் பால் ஊற்றிய பூக்கள், சாணத்தை ஒன்று சேர்த்து 'பூவரட்டி' யாகத் தட்டி காய வைப்பர்.
மார்கழி முப்பது நாளும் தயாரான பூவரட்டியையே தை மாதத்தில் வரும் சிறுவீட்டுப் பொங்கலுக்கு குழந்தைகள் பயன்படுத்துவர். தை மாதம் ஞாயிறன்று சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடுவர்.

