நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இக் ஷ்வாகு வம்சத்தில் சூரிய குலத்தில் உதித்தவன் ராமர். இந்த வம்சத்திற்கு பல பெருமை உண்டு. கடலை உருவாக்கிய சகர புத்திரர்கள், கங்கையை பூமிக்கு
கொண்டு வந்த பகீரதன், புறாவுக்காகத் தன் உயிரையே கொடுக்கத் துணிந்த சிபி, பல துன்பம் வந்தாலும் பொய் பேசாத அரிச்சந்திரன் அனைவரும் இவ்வசம்சத்தில் வந்தவர்கள். இவர்களில் தசரதன் மூத்த மகன் ஸ்ரீராமன் அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல நாட்டின் அரசன். இவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். கல்வியில் சிறந்து விளங்கினர்.