ADDED : மார் 22, 2024 09:25 AM

ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களால் சிலருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போகும். இவர்கள் முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் பாடிய கீழ்க்கண்ட திருப்புகழ் பாடலை தொடர்ந்து 48 நாட்கள் காலை அல்லது மாலையில் 6 முறை பாட வேண்டும். முருகனின் அருளால் விரைவில் வீட்டில் கெட்டி மேளம் கேட்கட்டும். இதோ அந்தப் பாடல்...
விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து... வெயில்காய
மிதவாடை வந்து தழல் போல ஒன்ற
வினைமாதர் தம்தம்... வசைகூற
குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிது ஆன துன்ப... மயல் தீர
குளிர்மாலையின் கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து... குறுகாயோ?
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த... மதியாளா!
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த... அதிதீரா
அறிவால் அறிந்து உன்இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல்... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே.