நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலையாளத்தில் ஐயப்பன் வரலாற்றை 'சாஸ்தா பாட்டு' என்பார்கள். இதில் போர் வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். கருப்பன், வாபர் என்னும் இரு நண்பர்கள் அவரின் வெற்றிக்காக பாடுபட்டனர்.
பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், வேளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்சேவம், வேளார்சேவம் என்னும் ஏழு பிரிவுகளாக சாஸ்தா பாடல்கள் உள்ளன. 'சேவம்' என்பது சேவகத்தைக் குறிக்கும் சொல். பாண்டிய மன்னரிடம் ஐயப்பன் போர்வீரனாக பணிபுரிந்த வரலாற்றை உடுக்கை அடித்தபடியே கதையாக பாடுவர். இதைப் பாடினாலும், கேட்டாலும் சனிதோஷம் விலகும்.