
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதியாதி யாதி நீயொரண்டமாதி;
யாதலால்
சோதியாத சோதி நீ; அதுண்மையில்
விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி
விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயமென்ன மாயமே?
'பெருமாளே! தொன்மைக்கெல்லாம் தொன்மையானவனே! மூலத்துக்கெல்லாம் மூலமாக இருப்பவன் நீ. ஒளியைத் தருபவர்களான சூரிய, சந்திரனுக்கு ஒளி தரும் பேரொளி நீ. உண்மையில் அதுவெல்லாம் நீயே. வேதம், வேள்வி, வானம், பூமியாக இருப்பவனும் நீ. இப்படி அனைத்துக்கும் ஆதியாக இருக்கும் நீ இடையர் குலத்தில் கிருஷ்ணராக அவதரித்து செய்த மாயச் செயல்களை என்னவெனச் சொல்வது' என்கிறார் திருமழிசை ஆழ்வார்.