ADDED : ஏப் 26, 2024 03:06 PM
அ நிறம் | அளவு
கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது திருவாவடுதுறை. நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தன் தந்தையின் யாகத்திற்கு பொருள் வேண்டி இங்குள்ள மாசிலாமணீஸ்வரரிடம் தேவாரப் பதிகம் பாடினார். சிவபெருமானும் இங்குள்ள பலிபீடத்தில் தினமும் ஆயிரம் பொற்காசுகள் கிடைக்க அருள்புரிந்தார்.
பத்து பாடல்கள் கொண்ட இந்த பதிகத்தை தினமும் மாலையில் விளக்கேற்றிய பிறகு பாடுங்கள். செல்வம் பெருகும்.
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அழுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.
