
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புத்திமான் பலவான் என்பதற்கேற்ப புத்திக்கூர்மையும், உடல்பலமும் கொண்டவர் அனுமன். மனைவியைப் பிரிந்த ராமரின் மனம் மகிழ 'கண்டேன் சீதையை' என்று சொல்லி உற்சாகப்படுத்தியவர். அவரது அசாத்திய பலத்தை யாரும் எடை போட முடியாது.
கடலை தாண்டுவது, பிரமாண்டமான மலைகளைப் பெயர்ப்பது, வனத்தையே துவம்சம் செய்வது என அவரது வீரத்தை பட்டியலிட ஆரம்பித்தால் அது சுலபத்தில் முடியாது. வாலில் நெருப்பு பற்ற வைத்து அவமானப்படுத்திய போது இலங்கையை தீக்கிரையாக்கினார். ராமதுாதரான இவருக்கு அனுமன், ஆஞ்சநேயர், வாயுபுத்திரன், மாருதி என பல பெயர்கள் உண்டு.