ADDED : டிச 11, 2022 08:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செங்கல்பட்டு அருகேயுள்ள திருக்கழுக்குன்றம் கோயிலில் சங்கு தீர்த்தம் விசேஷம். இதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு உருவாகும்.
* தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு தலத்தில் அருள்புரியும் அறம்வளர்த்த நாயகி அம்மனின் கையில் சங்கு சக்கரம் உள்ளன.
* காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நடுவே அமைந்துள்ளது சங்குபாணி விநாயகர் கோயில். இக்கோயிலில் உள்ள விநாயகர் சங்கினை கையில் ஏந்தி பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.
* கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தலம் அரிசிற்கரைப்புத்துார். இங்குள்ள சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி காட்சி தருகிறார்.
* தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலநாதர் கோயில் சங்கு வடிவத்தில் காணப்பெறும்.

