sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

"பின்னானார்' என்றால் யார் தெரியுமா

/

"பின்னானார்' என்றால் யார் தெரியுமா

"பின்னானார்' என்றால் யார் தெரியுமா

"பின்னானார்' என்றால் யார் தெரியுமா


ADDED : நவ 18, 2011 04:19 PM

Google News

ADDED : நவ 18, 2011 04:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வனவாசத்தின் போது, ராமர், சீதை, லட்சுமணன் சித்திரகூடத்தில் தங்கியிருந்தனர். ராமனை எப்படியும் அயோத்திக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் பரதன் வேகமாக வந்து கொண்டிருந்தான். இக்காட்சியைக் கண்ட லட்சுமணன், அண்ணனுடன் யுத்தம் செய்யத் தான் பரதன் வருகிறான் என்று தவறாக எண்ணி கோபத்துடன் வில் மீது கையை வைத்தான். ராமன் அவனைத் தடுத்தார். பின், பரதன் எதற்காக அங்கு வந்தான் என்பதை அறிந்த லட்சுமணன், தான் செய்த தவறுக்காக வருந்தினான். இதனால் ஏற்பட்ட பாவத்தை தீர்க்க திருமூழிக்களம் என்னும் தலத்தில் மகாவிஷ்ணுவை வழிபட்டான்.

இதனை திருமங்கையாழ்வார், ''பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்'' என்று பாடியுள்ளார். 'பின்னானார்' என்றால் 'ராமனுக்குப் பின்னால் பிறந்தவர்'. லட்சுமணன், பரதனைக் கட்டித் தழுவி இனிய சொற்களைப் பேசிக் கொண்டதால் இத்தலத்திற்கு 'திருமொழிக்களம்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அதுவே மருவி திருமூழிக்களம் என்று மாறியதாகவும் கூறுவர்.






      Dinamalar
      Follow us