sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சங்கடம் போக்கும் சதுர்த்தி நாயகன்

/

சங்கடம் போக்கும் சதுர்த்தி நாயகன்

சங்கடம் போக்கும் சதுர்த்தி நாயகன்

சங்கடம் போக்கும் சதுர்த்தி நாயகன்


ADDED : மே 08, 2021 03:06 PM

Google News

ADDED : மே 08, 2021 03:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேய்பிறை சதுர்த்தியின் அதிபதியான சக்தி ஒருமுறை விநாயகரை வழிபட்டு தனக்கும் வளர்பிறை சதுர்த்தி போல பெருமை வேண்டும் என வேண்டினாள்.

''தேவி! சந்திர உதய காலத்தில் நீ என்னை வழிபட்டதால் தேய்பிறை சதுர்த்தியும், சந்திரோதயமும் கூடிய இந்தக் காலம் சிறப்பு மிக்கதாகும். இதில் என்னை வழிபடுவோருக்கு சங்கடங்களை எல்லாம் நீக்கி சர்வ மங்களத்தை அருள்வேன். உனக்கு 'சங்கஷ்ட ஹரணி' என்ற பெயர் உண்டாகட்டும்!'' என விநாயகர் அருள்புரிந்தார். இதனடிப்படையில் தேய்பிறை சதுர்த்தி 'சங்கஷ்டஹர சதுர்த்தி' என்றானது. தற்போது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. 'துன்பம் போக்கும் சதுர்த்தி' என்பது இதன் பொருள்.

சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரன் உதயமாகும் போது சதுர்த்தி திதி இருப்பது அவசியம். விரதமிருப்பவர்கள் காலை முதல் மாலை வரை தண்ணீர், பழச்சாறு சாப்பிடலாம். மாலையில் நிலாவை பார்த்த பின்னர் விநாயகரை வழிபட்டு விநாயகர் அகவல், 108 போற்றி, அஷ்டோத்திரம், அகவல் பாடல்களை படிக்க வேண்டும். உப்பு, புளி, காரம் அதிகம் சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதமிருந்த கிருதவீர்யன் என்னும் மன்னர் கார்த்தவீர்யன் என்னும் வீரனை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்றார். சந்திரன் தனக்கு ஏற்பட்ட காசநோய் நீங்கி ஆரோக்கிய வாழ்வு பெற்றார்.

புருசுண்டி முனிவர் நரகத்தில் தவித்த தன் முன்னோர்களுக்கு விடுதலை கிடைக்கப் பெற்றார். தேய்பிறை சதுர்த்தியும், செவ்வாயும் இணையும் நாளில் நவக்கிரங்களில் ஒருவரான அங்காரகன் (செவ்வாய்) வழிபட்டு விநாயகரின் அருளால் பலம் பெற்றான். சங்கடஹர சதுர்த்தியான இன்று விநாயகரை வழிபடுவோருக்கு கைமேல் பலன் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us