sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நான்கு கண் நாய்க்குட்டி

/

நான்கு கண் நாய்க்குட்டி

நான்கு கண் நாய்க்குட்டி

நான்கு கண் நாய்க்குட்டி


ADDED : ஜூலை 15, 2011 11:02 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் உயிரைப் பறிக்க எமன் என்றொருவன் இருக்கிறான். பேச்சுவழக்கில் எமன் என்று குறிப்பிட்டாலும், 'யமன்' என்பதே சரியாகும். இவன் விவஸ்வானுக்கும், சரண்யூவிற்கும் பிறந்தவன். இவனுடைய தங்கை 'யமி'. இவளே யமுனை என்னும் நதியாக ஓடி வளம் சேர்க்கிறாள். இரட்டையர்களாகப் பிறந்த யமனும், யமியும் மனிதகுலத்தின் முதல் பிறவிகளாக உலகில் இருந்தார்கள். தீக்கடவுளான அக்னிதேவன் யமனுக்கு மிக நெருங்கிய நண்பன். உடம்பைத் தீயால் எரித்தபின், ஆன்மாவை எமனிடம் சேர்ப்பவன் அக்னியே. ஒருமுறை பணிச்சுமை காரணமாக அக்னிதேவன் சோர்வடைந்து கடலுக்குள் ஒளிந்து கொண்டான். தீயால் நடைபெறும் யாகம், ஹோமம் முதலிய எச்செயலும் இல்லாமல் உலகமே ஸ்தம்பித்துப் போனது. தேவர்கள் யாவரும் அக்னியை தேடிஅலைந்தனர். அக்னியின் நண்பனான எமனே, அவனை மீண்டும் கண்டுபிடித்து கொண்டு வந்து சேர்த்தான். யமனின் தூதர்களாக இருநாய்கள் உள்ளன. அவை இந்திரனின் நாயான சரமாவின் இரு குட்டிகளாகும். சரமாவின் இரு குட்டிகளும் கரும்பழுப்பு நிறத்தில் நான்கு கண்களுடன் இருப்பதாகவும், எமலோகத்திற்கு செல்லும் பாதையை உயிர்களுக்கு காட்டுவதாகவும் ரிக்வேதம் குறிப்பிடுகிறது.






      Dinamalar
      Follow us