sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பெற்றோருக்கு நற்செய்தி

/

பெற்றோருக்கு நற்செய்தி

பெற்றோருக்கு நற்செய்தி

பெற்றோருக்கு நற்செய்தி


ADDED : செப் 23, 2022 09:32 AM

Google News

ADDED : செப் 23, 2022 09:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுக்ராச்சாரியார், அசுர மன்னர் மகாபலிக்காக விஸ்வஜித் யாகத்தை நடத்தினார். அதன் பயனாக ஹோம குண்டத்தில் இருந்து தேர், வில், அம்புறாத்துாணி, பலவித கவசங்கள் கிடைத்தன. அவற்றுடன் புறப்பட்ட மகாபலி தேவலோகத்தை சூறையாடினான். தேவர்கள் அஞ்சி ஓடினர். தேவர்களின் தாய் அதிதி தன் பிள்ளைகளின் நிலை கண்டு வருந்தினாள். விஷ்ணுவைச் சரணடைந்து,

''யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாத

தீர்த்த ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயா''

என்ற ஸ்லோகம் சொல்லி வழிபட்டாள்.

யாகங்களால் ஆராதிக்கப்படுபவனே! பழமை மிக்கவனே! புதுமையானவனே! கங்கையை திருவடியில் கொண்டவனே! ஆறு போல பெருகி அருள் பொழிபவனே! கல்யாண குணம் மிக்க திருநாமங்கள் கொண்டவனே! என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

அதிதி தேவியின் வயிற்றில் வாமன மூர்த்தியாக அவதரித்த மகாவிஷ்ணு, தேவர்களை அசுர மன்னரான மகாபலியிடமிருந்து காப்பாற்றினார். அதிதி ஜபித்த இந்த ஸ்லோகத்தை சொன்னால் பிள்ளைகள் பெற்றோர் மீது அன்பும், பண்பும் கொண்டவர்களாக இருப்பர்.






      Dinamalar
      Follow us