sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

"இவர்' ஒரு தீர்க்கதரிசி

/

"இவர்' ஒரு தீர்க்கதரிசி

"இவர்' ஒரு தீர்க்கதரிசி

"இவர்' ஒரு தீர்க்கதரிசி


ADDED : ஜூலை 09, 2012 10:46 AM

Google News

ADDED : ஜூலை 09, 2012 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரதியார் 39 வயதிலேயே காலமாகி விட்டார். அவரது இளமைக்கால இறப்பு குறித்து, முன்னதாகவே தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தவர் அவரது நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார் (குவளைக் கண்ணன்). ஒருமுறை பாரதியாரும், ஆச்சாரியாரும்

பேசிக்கொண்டிருந்தனர். ''கிருஷ்ணா! நாலாயிர திவ்ய பிரபந்தத்தை எத்தனை ஆழ்வார்கள் இயற்றினார்கள்?'' ''இது தெரியாதா! பத்துபேர் பாடினார்கள்,''. (ஆழ்வார்கள் 12 பேர் என்றாலும், ஆண்டாளை பெரியாழ்வாரோடும், மதுரகவியாழ்வாரை நம்மாழ்வாரோடும் இணைத்து பத்தாகச் சொல்வது வைணவ மரபு) ''பத்து பேர் சேர்ந்து 4000 பாடல் எழுதியிருக்கிறார்கள். பார்... பார்...நான் ஒருவன் மட்டும் 6000 பாட்டு எழுதுகிறேன்,''.

''அது உங்களால் முடியாது பாரதி! ஏனெனில், கலியுகத்தில் மனிதனுக்கு ஆயுள் குறைவு. அதனால், நீங்கள் எடுக்கும் முயற்சி சந்தேகமே!'' என்றார் ஆச்சாரியார்.

பாரதி எழுத ஆரம்பித்து விட்டார். இடையில் வீட்டில் பணக்கஷ்டம், குடும்பத்தில் பிரச்னை, வியாதி இவற்றால் 66 பாடல்கள் தான் முடிந்திருந்தது. அதற்குள் அவரது விதியை ஒரு யானை முடிவு செய்து விட்டது. பிற்காலத்தில் வந்தவர்கள், அந்த 66 பாடல்களையும் தொகுத்து 'பாரதி 66' என்ற பெயருடன் பாடல்களை வெளியிட்டனர். பாரதியாரின் இளமைக்கால இறப்பு குறித்து, குவளையூராருக்கு ஏதோ உள்ளுணர்வு உறுத்தி யிருக்கிறது என்று தான் கருத வேண்டியுள்ளது.






      Dinamalar
      Follow us