ADDED : அக் 15, 2012 01:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் 'அழகு'. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். ரங்கோலி இட்டால் எடுப்பாக இருக்கும். மேடை அமைத்து பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும். 5.7.9 படிகள் அமைத்து கொலு வைக்கலாம். அவரவர் வசதிக்கு தகுந்தபடியான பொம்மைகளை வாங்கிக் கொள்ளலாம்.