ADDED : ஏப் 15, 2011 11:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளழகர் கோயில் மூலவரின் திருநாமம் பரமசுவாமி. நின்றகோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் காட்சிதருகிறார். கையில் சக்கரம் பிரயோக நிலையில் உள்ளது. உற்சவருக்கே அழகர், சுந்தரராஜர் என்ற பெயர்கள் உண்டு. அபரஞ்சி என்னும் உயர்ந்த பொன்னால் செய்யப்பட்ட மூர்த்தியே அழகர். அழகர்கோவிலிலும், திருவனந்தபுரத்திலும் மட்டுமே அபரஞ்சி உற்சவமூர்த்திகள் உள்ளன. சித்திரை திருவிழாவுக்காக, மதுரை வரும்போதும், நூபுர கங்கைத்தீர்த்தில் தான், அழகர் சிலைக்கு அபிஷேகம் நடக்கும்.