sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கண்ணுக்கு தெரியாத 'கார்'

/

கண்ணுக்கு தெரியாத 'கார்'

கண்ணுக்கு தெரியாத 'கார்'

கண்ணுக்கு தெரியாத 'கார்'


ADDED : டிச 30, 2016 10:53 AM

Google News

ADDED : டிச 30, 2016 10:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பறவைகளின் அரசன் என்பதால் கருடனுக்கு 'பட்சி ராஜன்' என்று பெயர். இதைக் கண்டாலும், அதன் குரல் கேட்டாலும் புண்ணியம் என்பதை, 'காருடதர்சனம் புண்யம் ததோபித்வ நிருச்யமாதோ' என்கிறது ஒரு ஸ்லோகம். திருமாலுக்கு சேவை செய்யும் அடியவர்களுக்கு 'நித்யசூரிகள்' என்று பெயர். இவர்களில் முதன்மையானவராக கருடன் கருதப்படுகிறார்.

'ஆதிமூலமே' என்று அழைத்த கஜேந்திரனுக்கு அருள்புரிய திருமால் கருடன் மீதேறி விரைந்து வந்ததாக பாகவதம் கூறுகிறது. திருமாலின் வாகனமான இவருக்கு, பெருமாள் கோவில்களில் கருவறை எதிரில் சன்னிதி இருக்கும். இந்த கருட வாகனத்திற்கும் வாகனம் இருப்பதை 'சுபர்ணோ வாயு வாஹனா' என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது.'காற்றை வாகனமாகக் கொண்ட கருடனே' என்பது இதன் பொருள். கண்ணுக்கு தெரியாத 'கார்' போல, காற்றை வாகனமாகக் கொண்டவர் இவர்.






      Dinamalar
      Follow us