sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மத்தியில் இருக்கும் மாத்ருபூதம்

/

மத்தியில் இருக்கும் மாத்ருபூதம்

மத்தியில் இருக்கும் மாத்ருபூதம்

மத்தியில் இருக்கும் மாத்ருபூதம்


ADDED : ஜூன் 10, 2011 09:20 AM

Google News

ADDED : ஜூன் 10, 2011 09:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பது பெரியோர் வாக்கு. அவளது பெருமையை பறை சாற்றும் விதமாக சிவபெருமானே, ரத்தினாவதி என்னும் கர்ப்பவதிக்கு தாயாக வந்து பிரசவம் செய்தருளினார். இப்பெருமான் திருச்சி மலைக்கோட்டையில் அருள்பாலிக்கிறார். மலையின் மத்தியில் சுயம்புமூர்த்தியாக மேற்கே நோக்கி வீற்றிருக்கும் இவருக்கு 'தாயுமானவர்' என்பது திருநாமம். வடமொழியில் 'மாத்ருபூத ஈஸ்வரர்' என்பர். இவரது துணைவியான 'மட்டுவார்குழலி அம்மன்' தனி சன்னதியில் காட்சிதருகிறாள். சாரமாமுனிவர் என்பவர், நாகலோகத்தில் இருந்து, கொண்டு வந்த செவ்வந்தி மலர்களால் தாயுமானவரைப் பூஜித்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

திருநாவுக்கரசர் தாயுமானவரை தேவாரப்பாடலில், ''சிராப்பள்ளி சிவனை நினைத்தால் உள்ளம் குளிர்கிறது'' என்று போற்றியுள்ளார். சிவபெருமானின் 64விதமான மூர்த்தங்களில் ஒன்றான கங்காள மூர்த்தத்தை இங்கு தரிசிக்கலாம். திரிசிரன் என்னும் அசுரன் சிவபெருமானை வழிபட்டதால் திரிசிரபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.






      Dinamalar
      Follow us