ADDED : டிச 24, 2012 03:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதர்களை, பூர்வீகக் குடிகள், நவீன காலத்தவர் என்று இருவகையாகப் பிரிப்பது போல, வேதம் கடவுளைப் பூர்வகால பரமாத்மா, நவீனகால பரமாத்மா என்று பிரிக்கிறது. வைகுண்டத்தில் பாற்கடல் வாசனாக வீற்றிருக்கும் பரவாசுதேவனே பூர்வீகமானவன். அதாவது பழமை மிக்கவன். அவனிடமிருந்தே இந்த பிரபஞ்சம் உற்பத்தியானது. பூலோக உயிர்களைக் காப்பதற்காக அவன் இறங்கி வருவதுண்டு. அதையே 'அவதாரம்' என்று குறிப்பிடுகிறோம். ''நரசிம்ஹ ராம கிருஷ்ணாத் அவதாரைஹி'' என்கிறது வேதம். பரம்பொருள், சாமான்ய மக்களிடம் கலந்து வாழ்வதற்காக பூமியில் அவதரிக்கிறார். இவற்றில் நரசிம்ம, ராம, கிருஷ்ண அவதாரங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர்களை வேதம் 'நவீனமான பரமாத்மா' என்று போற்றுகிறது.