ADDED : பிப் 06, 2022 03:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமர் தன் தம்பிகளோடு காட்சியளிப்பதை 'பட்டாபிேஷக கோலம்' என்று சொல்வர். இதில் சீதையுடன் ராமர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். ராமர் நின்ற கோலத்தில் இருக்கும் கோயில்களை 'சித்ரகூடம்' என்று குறிப்பிடுவர். இதில் ராமர் சீதை, லட்சுமணருடன் நின்றபடி இருப்பார். வனவாசம் சென்ற காலத்தில், ராமர் தங்கியதில் முக்கிய இடங்கள் இரண்டு.ஒன்று சித்ரகூடம், மற்றொன்று பஞ்சவடி. இதில் பஞ்சவடியில் இருந்து சீதையை ராவணன் கடத்திச் சென்றதால் அதை மையப்படுத்தி ஓவியம் வரையும் வழக்கம் இல்லை.

