ADDED : ஜூலை 26, 2021 06:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ணாரி என்பது கன்னட வார்த்தை. இதன் பொருள் 'இங்கிருந்து நகர மாட்டேன்' என்பதாகும். இதற்கான காரணம் தெரியுமா. ஒருமுறை மைசூரு சாமுண்டீஸ்வரியைத் தன் ஊருக்கு அழைத்துச் செல்ல முனிவர் ஒருவர் வந்தார். அம்மனும் சம்மதித்தாள். 'நீ திரும்பி பார்க்காமல் முன்னால் சென்றால் நான் பின்னால் வருவேன்' என உறுதியளித்தாள். முன்நோக்கிச் சென்ற முனிவரோ ஓரிடத்தில் அம்மன் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தார். அந்த இடத்தில் அம்மன் தங்கி விட்டாள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள இத்தலம் அன்று முதல் பண்ணாரி எனப் பட்டது.