ADDED : பிப் 05, 2013 12:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமரும் சீதையும் ஆசனத்தில் அமர்ந்து, தம்பிகள் நின்று கொண்டிருந்தால் அதை 'பட்டாபிஷேக கோலம்' என்பர். சீதாராமர், லட்சுமணருடன் நிற்கும் கோலத்திலுள்ள கோயில்களை 'சித்ரகூடம்' என்று சொல்வர். வனவாசம் சென்ற காலத்தில் ராமரும் சீதையும் லட்சுமணரோடு இருந்த முக்கிய இடங்கள் இரண்டு. ஒன்று சித்ரகூடம், மற்றொன்று பஞ்சவடி. பஞ்சவடியில் இருந்து சீதையை ராவணன் தூக்கிச் சென்றதால், அந்த இடத்தை ஓவியம் வரையும் வழக்கம் குறைவு.

