sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சொன்னதை கேட்கும் பெருமாள்!

/

சொன்னதை கேட்கும் பெருமாள்!

சொன்னதை கேட்கும் பெருமாள்!

சொன்னதை கேட்கும் பெருமாள்!


ADDED : செப் 23, 2016 10:27 AM

Google News

ADDED : செப் 23, 2016 10:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் திருவெஃகாவில் உள்ளது சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில். இங்கு வலமிருந்து இடமாக பள்ளி கொண்ட கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். இதனால் இவருக்கு, 'கிடந்தான்' என்று பெயர். ஆழ்வார்கள் இவரை, 'கச்சிக்கிடந்தான்', 'கஞ்சைக்கிடந்தான்' என்று மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமழிசை ஆழ்வாரின் சீடரான கணிகண்ணன் என்ற பக்தரை, தன் மீது பாடல் பாடும்படி பணித்தான் ஒரு மன்னன். அவர் மறுக்கவே நாடு கடத்த உத்தரவிட்டான். இதையறிந்த திருமழிசையாழ்வார் அவ்வூரை விட்டுக் கிளம்பினார். பள்ளி கொண்ட பெருமாளையும் தன்னுடன் அழைத்தார். ஆழ்வாரின் சொல் கேட்ட சுவாமியும் அவருடன் கிளம்பினார். இவ்வாறு தன் பக்தர் சொன்னதை உடனே செய்ததால் இவருக்கு, 'சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என்ற திருநாமம் அமைந்தது. பொய்கையாழ்வாரின் அவதார தலம் இது என்பது கூடுதல் சிறப்பு.






      Dinamalar
      Follow us