
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரானந்தர் என்னும் சித்தருக்கு தனி சன்னதி உள்ளது. சதுரகிரி மலையில் மகாலிங்கத்தை பிரதிஷ்டை செய்த அகத்தியர், அதை சுந்தரானந்தரின் பொறுப்பில் விட்டுச் சென்றார். அதனால் அவருக்கு 'சுந்தர மகாலிங்கசுவாமி' எனப் பெயர் வந்தது.
புதன் தலமாக மதுரை விளங்குவதால், சித்தரை புதன் கிழமையில் வழிபட்டால் கல்வி வளர்ச்சி ஏற்படும். விருப்பம் நிறைவேற பக்தர்கள் சித்தருக்கு பூவிலே பந்தல் இடுகின்றனர். சிவனே சித்தராக எழுந்தருளி கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் இங்கு தான் நிகழ்ந்தது. இதனால் 'எல்லாம் வல்ல சித்தர்' எனப் பெயர் வந்தது. இவரது சன்னதி அருகில் கல்யானை உள்ளது.