ADDED : ஜன 08, 2021 05:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு வருடமும் தை முதல் ஆனி வரை வடக்கு நோக்கியும், ஆடி முதல் மார்கழி வரை தெற்கு நோக்கியும் சூரியன் பயணிக்கிறார். இதை முறையே உத்தராயணம், தட்சிணாயனம் என கூறுவர். தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு. இதில் உத்தராயண காலம் தேவர்களுக்கு பகலாகவும், தட்சிணாயனம் இரவாகவும் இருக்கும்.
ஆறு மாதமாக தெற்கில் பயணித்த சூரியன் வடக்கு நோக்கி திரும்பும் நாளான தை முதல்நாளில் பொங்கல் கொண்டாடுகிறோம். சூரியனை வழிபட்டால் வாழ்வு செழிக்கும்.