
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்டிகைகளில் 'பூஜை' என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் 'பூஜா' என்பதில் இருந்து பிறந்தது. 'பூ' என்றால் 'பூர்த்தி'. 'ஜா' என்றால் 'உண்டாக்குவது'. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் 'ஆணவம், கன்மம், மாயை' என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே 'பூஜை'. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் 'பூஜை' என்ற அடைமொழி இணைந்தது.