ADDED : மார் 24, 2017 10:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பத்மாசுரனை வென்ற மகிழ்ச்சியுடன் முருகன் அருள்புரியும் தலம் திருச்செந்தூர். அறுபடை வீட்டில் இரண்டாம் தலம். இவ்வூருக்கு 'வெற்றிமாநகர்' என்னும் பொருளில் 'ஜெயந்திபுரம்' என பெயர் இருந்தது. 'ஜெயந்தி' என்னும் சொல்லே 'செந்தில்' என திரிந்தது. கடலில் நீராடி முருகனைத் தரிசிப்பது நன்மை தரும்.

