ADDED : ஜூன் 03, 2011 09:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தைகள் வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டு விளையாடினால் கம்முன்னு இருங்க' என்று பெரியவர்கள் கண்டிப்பது வழக்கம். 'கம்' என்ற சொல் அமைதியைக்குறிக்கிறது. காரியம் ஆகவேண்டுமானாலும் அருளாளர்கள் 'கம்' என்று தான் இருக்கச் சொல்கிறார்கள். 'கம்' என்பது விநாயகருக்குரிய பீஜ மந்திரமாகும். பீஜம் என்றால் 'விதை'. விதை விதைத்தால் பயிர் வளரும். பக்தியோடு 'கம்' என்னும் மந்திரத்தைச் சொல்லி, கணபதியின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி கிடைக்கும்.