sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மனசிலே அழுக்கு பிடிக்கப்படாது! - பெரியவர் சொல்லும் புத்திமதி

/

மனசிலே அழுக்கு பிடிக்கப்படாது! - பெரியவர் சொல்லும் புத்திமதி

மனசிலே அழுக்கு பிடிக்கப்படாது! - பெரியவர் சொல்லும் புத்திமதி

மனசிலே அழுக்கு பிடிக்கப்படாது! - பெரியவர் சொல்லும் புத்திமதி


ADDED : ஜூலை 15, 2011 11:23 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 11:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'உடல், உடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அது தான் உள்ளம், மனம் என்பது. மனச்சுத்தம், உள்ளத்தூய்மை தான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனே இல்லை. மனசிலே அழுக்குப் பிடிக்காமல் அதை அவ்வப்போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்,'' என்கிறார் காஞ்சி மகா பெரியவாள்.

மனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன? தப்பு, தவறு செய்வது தான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் செய்கிற காரியங்களில் தவறு ஏற்படக்கூடாது. அதாவது கெட்ட நோக்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது.

ஆனாலும், காரியம் என்று வந்துவிட்டால் நல்லதைச் செய்கிறபோது கூட அதிலே சில தப்பு, தவறுகள் நேர்ந்து விடலாம். இதனால், பெரிய குற்றம், அதாவது தோஷம் இல்லை. ரொம்பப் பெரியவர்கள்கூட எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறபோது, அவர்களையும் கொஞ்சம் சறுக்கிவிட்டிருக்கிறது. நாமே எல்லாம் செய்து கொள்ள முடியும் என்று கர்வப்படாமல், பகவான் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணருவதற்காகவே இப்படிச் சில தவறுகள் நேர்ந்து விடுகின்றன. இம்மாதிரி, சமயங்களில் நீங்கள் பகவானை வேண்டிக் கொள்வது தான் சரி. அதுவே அழுக்கைக் கழுவி விடும்.






      Dinamalar
      Follow us