
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதன் தோன்றிய காலத்தில் கடவுளுக்கு சிலைகள் இல்லை. ஒளியையே தெய்வமாக வழிபட்டுள்ளான். ஜோதி வடிவில் இறைவனைக் கண்டான். அதனால் தான் வள்ளலார் இறைவனை 'அருட்பெருஞ்ஜோதி' என அழைத்தார்.
இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றப்படுகிறது. இதேபோல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதி வடிவாக, பொன்னம்பல மேட்டில் மகரசாந்தியன்று (மார்கழி கடைசி நாள் அல்லது தை முதல் நாள்) காட்சி தருகிறார்.