sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நாகாபரணம் சூட்டும் காரணம்

/

நாகாபரணம் சூட்டும் காரணம்

நாகாபரணம் சூட்டும் காரணம்

நாகாபரணம் சூட்டும் காரணம்


ADDED : ஆக 05, 2016 09:28 AM

Google News

ADDED : ஆக 05, 2016 09:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவாலயங்களில் உள்ள லிங்கத்திற்கு மேல், உலோகத்தில் செய்த ஐந்து தலை நாகத்தை ஆபரணமாக சூட்டுகிறார்கள். இதற்கு காரணம் தெரியுமா? சில ரிஷிகள் தாருகாவனம் என்னும் இடத்தில் யாகம் நடத்தினர். தாங்கள் நடத்தும் யாகத்தால் தான், தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் அவிர்பாகம் (உணவு) கிடைக்கிறது என்று இறுமாப்பு கொண்டனர். அவர்களது ஆணவத்தை அடக்க சிவன் பிச்சை எடுக்கும் கோலத்தில் அங்கு வந்தார்.

அவரது அழகு கண்ட ரிஷிகளின் துணைவியர் தங்களை மறந்து அவர் பின்னாலேயே சென்றனர். இது கண்டு அதிர்ந்த ரிஷிகள், யாக குண்டத்தில் இருந்து விஷம் மிக்க பாம்புகளை ஏவி விட்டனர். அவற்றை எல்லாம் சிவன், தன் தலை முதல் பாதம் வரை ஆபரணமாகச் சூடிக் கொண்டார். இதன் அடிப்படையில், கோவிலில் சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகப்பாம்பினை ஆபரணமாக அணிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us