ADDED : மே 26, 2022 10:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரம்மச்சாரியான விநாயகரைச் சுற்றினால் கல்யாண வரம் கிடைக்கிறதே... எப்படி?
வள்ளியை நேசித்த முருகப்பெருமானுக்கு நல்ல முடிவு கிடைக்கவில்லை. கடைசியில் அண்ணனான விநாயகரின் உதவியை நாட, அவர் யானை வடிவில் தோன்றினார். அதைக் கண்டதும் பயந்த வள்ளி, தன் அருகில் வேடன் வடிவில் நின்றிருந்த முருகனைத் தழுவினாள். இருவருக்கும் காதல் மலர அது கல்யாணத்தில் முடிந்தது. தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைப்பவர்களே உலகில் அதிகம். ஆனால் பிரம்மச்சாரியான விநாயகரோ தன்னைச் சரணடைந்தவருக்கு கல்யாண வரம் கொடுத்து மகிழ்கிறார்.

