sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வாராய் என் தோழி வாராயோ! மணப்பந்தல் காண வாராயோ!

/

வாராய் என் தோழி வாராயோ! மணப்பந்தல் காண வாராயோ!

வாராய் என் தோழி வாராயோ! மணப்பந்தல் காண வாராயோ!

வாராய் என் தோழி வாராயோ! மணப்பந்தல் காண வாராயோ!


ADDED : ஆக 10, 2014 05:58 PM

Google News

ADDED : ஆக 10, 2014 05:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடடா...எத்தனையோ கோயிலுக்குப் போயாச்சு! கல்யாணம் நடந்த பாடா தெரியலை! மாப்பிள்ளை நல்ல பையனா தெரிஞ்சா வேலை சுமாரா இருக்குது! எல்லாமே சரியா அமைஞ்சா அவங்க கேட்கிற சீர்வரிசையைச் செய்யுறதிலே பணமுடை ஏற்படுது! இப்படி எத்தனையோ காரணங்களால், திருமணத்தடை ஏற்படுகிறதா! மணப்பெண்களே! இதுபோன்ற தடைகளைப் போக்குவற்கென்றே 'மணமாலை அணியும் வழிபாடு' என்ற நிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி(சின்னம்பேடு) பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆக.10ல் நடக்க உள்ளது.

அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் ஐந்தாம் ஆண்டு விழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 7மணிக்கு அபிஷேகத்துடன் விழா தொடங்கும். இதையடுத்து 8 மணிக்கு வள்ளி மணவாளப் பெருமாளுக்கு திருமணம் நடக்கும். பின்பு, சுவாமி கோயிலுக்குள் பவனி வருவார்.

திருமணமாகாத ஆண், பெண்கள் மாலை ஒன்றைக் கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிக்க வேண்டும். அதையே பிரசாதமாகப் பெற்று, சுவாமி பவனி வரும் போது, அவர் பின்னால் வலம் வர வேண்டும். இவ்வாறு செய்தால் எத்தகைய திருமணத்தடையும் நீங்கும் என்பது ஐதீகம். அன்னதானமும் உண்டு.

சிறுவாபுரியாரை வணங்கினால் சீக்கிரமே திருமணம் நடக்கும். வாருங்களேன்! நீங்களும் சிறுவாபுரிக்கு.

இருப்பிடம்: கோயம்பேட்டில் இருந்து 35 கி.மீ.,

போன்: 97909 57593, 044-2471 2173






      Dinamalar
      Follow us