sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

என்ன நிறம்... என்ன பலன்!

/

என்ன நிறம்... என்ன பலன்!

என்ன நிறம்... என்ன பலன்!

என்ன நிறம்... என்ன பலன்!


ADDED : மே 11, 2017 01:44 PM

Google News

ADDED : மே 11, 2017 01:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலில் உள்ள மின்காந்த சக்தி, புருவங்களின் நடுவில் விசேஷமாக வெளிப் படுகிறது. இந்த இடத்தை 'ஞானக்கண்' 'ஆக்ஞா சக்கர ஸ்தானம்' என குறிப்பிடுவர். அதை தூண்டி விடுவதற்காக சந்தனம், குங்குமத்தை திலகமாக நாம் இடுகிறோம். 'திலம்' என்பது எள்ளை குறிக்கும். திலகம் என்பதற்கு 'எள் அளவுக்கு சிறிதாக வைப்பது' என்பது பொருள்.

மனம் ஏதாவது ஒரு விஷயத்தால் பாதிப்பு அடையும் போது, உஷ்ணத்தால் தலைவலி ஏற்படும். சந்தனம், குங்குமம் இடுவதால் தலை பாதிப்பு நேராமல் குளிர்ச்சி உண்டாகும். காளிதாசரின் 'மாளவிகாக்னி மித்ரம்' என்னும் காவியம் திலகத்தின் பெருமையை விளக்குகிறது.

பிறரைக் கவர சிவப்பு, செல்வத்திற்கு மஞ்சள், அமைதிக்கு வெள்ளை, முகத்தின் பொலிவிற்கு கருப்பு நிறத்தில் திலகமிட வேண்டும். திலகமிடும் விரலுக்கேற்ப பலன் மாறுபடும். வலது கை மோதிர விரல் மன அமைதிக்கும், நடுவிரல் ஆயுள் விருத்திக்கும், கட்டை விரல் மன வலிமைக்கும், ஆள்காட்டி விரல் மோட்சத்திற்கும் வழிவகுக்கும்.






      Dinamalar
      Follow us