ADDED : ஜன 15, 2009 10:55 AM

<P>* ஒருவன் எத்தனை சிறப்புகள் பெற்றிருந்தாலும், விசேஷ குணங்கள் அடைந்திருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு குறைந்தவனாகவே இருக்கும்படி இயற்கையமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது. <BR>* படித்தவன் படிக்க முடியாதவனை குருடனாகக் கருதி இழிவு செய்கிறான். பணம் கொண்ட செல்வந்தனோ பணமில்லாத ஏழையை பிணமாகக் கருதி கேவலப்படுத்துகிறான்.<BR>* மனிதர்கள் எலியொன்று பொறிக்குள்ளே அகப்பட்டுத் தவிப்பதுபோல, ஆசையினால் ஒரு சில நெருக்கடிகளுக்குள் தங்களைத் தாங்களே அகப்பட வைத்துக் கொண்டு தவிக்கிறார்கள். <BR>* மனித சமூகத்திற்குள் பேதங்கள் மலிந்து விட்டன. இந்த வேறுபாட்டால் போட்டி, பொறாமை, மனப்போராட்டம், கஷ்ட நஷ்டம் என்று கணக்கில்லாமல் பெருகி மனித வாழ்க்கையே நரகமாகி விட்டது. <BR>* ஒவ்வொரு கணப்பொழுதும் சத்தியத்தையே சிந்திந்து, தர்மத்தையே ஆதரித்துப் பரம்பொருளாகிய கடவுளை அறிய முயல்பவன் எவனோ அவனே மனிதன் என்றும் தேவர் என்றும் சொல்வதற்கு உரியவன் ஆவான். <BR>* மனிதனுக்குள்ளே கடவுளாகிய பரமாத்மாவின் சக்தி தான் எல்லாவற்றையும் நிகழ்த்துகின்றது என்பதை சாமான்ய நிலையில் அறியமுடியாமல் அறிவானது அறியாமை நிலையில் மறைக்கப்பட்டிருக்கிறது.</P>