ADDED : ஜன 20, 2017 04:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறர் குற்றங்களை மன்னிக்கும் நல்ல மனம் குற்றமற்ற நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும். அவர்களால் இந்த உலகம் இயங்குகிறது.
* குற்றவாளியை சீர்படுத்தி அறிவிலும், ஒழுக்கத்திலும் மேம்படுத்த வேண்டியது நீதித்துறையின் கடமை.
* நல்லவர்களின் தொடர்பும், மனதில் துணிவும் உண்டாகி விட்டால் குற்றம் செய்யும் எண்ணம் மறைந்து விடும்.
* தன் குற்றத்தை சுண்டைக்காயாகவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காயாகவும் யாரும் கருதக்கூடாது.
- பாரதியார்