/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
மனதுக்கு "டெஸ்ட்' வையுங்கள்
/
மனதுக்கு "டெஸ்ட்' வையுங்கள்
ADDED : டிச 31, 2010 07:12 AM

*பொருள்களைத் தேடிப் போவதால்
வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மன
நிறைவோடு இருப்பது தான்.
*குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமூகப்பணிக்கு செல்ல வேண்டியதில்லை. அதையும்
விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு
சேர்த்துச் செய்ய வேண்டும்.
* நாம் நினை என்றால் தான் மனம் அதைப்பற்றி நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வென்றால் தான் அது
கட்டுப்பாட்டில் உள்ளதாக அர்த்தம்.
* கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும். சகல
விஷயங்களுக்கும் ஒழுக்கம் அடிப்படையாக இருக்க வேண்டும்.
*தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க
முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிக்க வேண்டும். இப்படிச் செலவழிப்பது தான் 'தனக்கு மிஞ்சிய தர்மம்' என்பதாகும்.
-காஞ்சிப்பெரியவர்