ADDED : பிப் 28, 2013 11:02 AM

* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
* எவர் ஒருவர் துன்பத்திற்கு ஆளானவரை நெருங்கி ஆறுதல் மனமிரங்கி கூறுகிறாரோ, அவருக்கு துன்பத்திற்கு ஆளானவருடைய நன்மைக்குச் சமமான நன்மை கிடைக்கும்.
* வெட்கம் நன்மைகளை இழுத்து வரும். உனக்கு வெட்கம் இல்லையாயின் உனது இஷ்டம் போல் நடந்து கொள்.
* இறைவனிடத்தில் சிறந்தவர் யார் என்றால், தன்னுடைய நண்பர்களிடம் நல்லவராக நடப்பவரே!
* உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அன்பளிப்புகளைக் கொடுப்பது மனதிலுள்ள பொறாமைகளை அழித்து விடுகின்றது.
* கெட்டவர்களுடன் தோழமை கொள்ளாதே. ஏனென்றால் அவர்களுடன் தோழமை கொண்டால் அவர்களின் கணக்கில் உன்னையும் சேர்த்துக் கொள்ளப்படும்.
- நபிகள் நாயகம்