
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெரும் பாவியை குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாக செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்து புறம் பேசுவது குற்றமாகாது.
* மனைவியை திருப்திப்படுத்துவதற்காக பொய் சொல்லலாம். போர்க்களத்தில் எதிரியை தந்திரத்தால் வெல்வதற்காக பொய் சொல்லலாம்.
* அல்லாஹ்வுக்கு மிக பிரியத்திற்குரிய தளம் பள்ளிவாசலாகும். அவனுக்கு மிக மிக வெறுப்புக்குஉரிய இடம் கடைவீதியாகும்.
* சொர்க்கம் வேண்டுமா? விருப்பம் கொண்டவர் பெற்றோர்களை சந்தோஷப்படுத்தவும்.
* நீங்கள் இரவில் அதிகமாக தூங்காதீர்கள். ஏனென்றால் அதிகமாக தூங்கினால் கியாமநாளில் ஏழையாக எழுப்பப்படுவீர்கள்.
* பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.
- நபிகள் நாயகம்