/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ராமகிருஷ்ணர்
/
அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு
/
அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு
ADDED : மே 21, 2017 12:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*கடவுள் ஒருவரே உலகில் சத்தியப் பொருள். மற்ற அனைத்தும் பொருளற்ற பொய்ப் பொருளே. இதை உணர்ந்தவனே விவேகியாவான்.
*பக்தியுள்ளவனாக மாறி விடு. அதே சமயத்தில் மனதில் மூடத்தனத்திற்கு சிறிதும் இடம் அளித்து விடாதே.
*கடவுளின் திருநாமத்திற்கு சக்தி அதிகம். அதை ஜெபிப்பதற்குரிய தகுதி துாய பக்திக்கு உண்டு.
*அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிக்கும் மனிதனே பாக்கியவான். அவனது மனம் சமநிலை இழப்பதில்லை.
- ராமகிருஷ்ணர்