ADDED : மே 06, 2015 02:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நீ கடவுளின் கையில் கருவியாக மாறி விடு. அகந்தை எண்ணம் மறையும்.
* எப்போதும் கடமையில் ஈடுபடு. ஆனால், மனம் மட்டும் கடவுளைச் சிந்திக்கட்டும்.
* காலத்தை வீணாக்காதே. கடவுளை முழுமையாக நம்பத் தொடங்கு.
* சேற்றில் வாழ்ந்தால் மீனின் உடம்பில் சேறு ஒட்டுவதில்லை. உலகில் வாழ்ந்தாலும் தீய ஆசைகள் மனதில் ஒட்டாமல் பார்த்துக் கொள்.
* விவேகம் கொண்டவனுக்கு வாழ்வில் உண்மை எது, பொய் எது என்ற மனத்தெளிவு இருக்கும்.
* மனிதனின் உயர்வும், தாழ்வும் அவனுடைய மனதைப் பொறுத்தே உண்டாகிறது.
-ராமகிருஷ்ணர்