ADDED : ஜன 26, 2024 07:01 AM

* சிறிதோ, பெரிதோ எடுத்துக்கொண்ட செயலை முழு ஆர்வத்துடன் செய். * ஒருவருடைய வளர்ச்சியும் அழிவும் அவருடைய நாக்கைச் சார்ந்தே உள்ளது. * பிறர் செய்த உதவியை மறப்பவர்கள் நரகத்தில் இருந்து தப்ப முடியாது. * பெரியோர்களிடம் பழகினால் உனது குலமே ஒளி மிகுந்ததாக மாறும். * வறுமை, நோய், துன்பம், சிறைவாசம் என்பது ஒருவர் செய்த பாவம் என்ற மரத்தில் பழுக்கும் பழங்கள். * புத்தகத்தில் உள்ள கடுமையான சொற்கள் அறிவை வளர்க்கும். * புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது சிறிதும் கூச்சப்படாதே. * வித்தை கற்பது, ஜபம் செய்வது, தானம் கொடுப்பது என இம்மூன்று விஷயங்களிலும் ஒருவர் திருப்தி அடையக்கூடாது. * பொய் சொல்வது, கோபப்படுவது, முட்டாள்தனம், பேராசை, கருணையின்மை போன்றவை தீயவர்களிடம் இயல்பாகவே உண்டு. * மனதிற்கு மிகவும் துன்பத்தை தரக்கூடியது முட்டாள்தனம். * கொஞ்சம் கொஞ்சமாக படித்தால்கூட முட்டாள் புத்திசாலியாக மாறுவான். * உன் சுதந்திரத்திற்கு ஆபத்து நேரும்படி, நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே. * அரசன், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, முட்டாள் ஆகியோரிடம் தர்க்கம் செய்யாதே.
கட்டளையிடுகிறார் சாணக்கியர்

