ADDED : டிச 07, 2023 10:41 AM
* நல்ல குணம் நம்பிக்கைக்குரிய அடையாளம். தீயகுணம் நயவஞ்சகத்தின் அடையாளம்.
* பறவைகளை பறக்கவிட்டு அதனால் சகுனம் பார்ப்பது, கல்லெறிந்து குறிகேட்பது ஆகியவை இறைவனன்றி மற்றவற்றை வணங்குவதற்கு இணையான செயலாகும்.
* பாவங்களைச் செய்வதற்குத் துாண்டுகோலாக இருப்பது பேராசையே.
* இறைநம்பிக்கையாளர் ஒருவர் மற்றொருவருக்கு சகோதரர் ஆவார்.
* பெற்றோரை நிந்திப்பவன் தன் குழந்தைகளால் நிந்திக்கப்படுவான்.
* காலத்தைக் கணிப்பதற்கும், வெளிச்சத்தைத் தருவதற்கும்தான் சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன. அவற்றின் சுழற்சியைக் கொண்டு நன்மை, தீமையை கணிப்பதற்கல்ல.
* தன்னை முழுமையாக சார்ந்திருந்து செயல்படுவோரை அவன் நேசிக்கிறான்.
* மறுமைநாளை ஏற்றுக்கொள்பவர்கள் நல்லவற்றைக் கூற வேண்டும். இல்லையெனில் மவுனமாக இருக்கவும்.
* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்தச் செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.
* நல்ல செயலைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
* அடிமையிடம் தீய முறையில் நடந்து கொண்டவர் சுவனபதி செல்ல மாட்டார்.
* ஒட்டகத்தை கட்டி வைத்துவிட்டு இறைவன்மீது நம்பிக்கை வையுங்கள்.