sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

தகவல்கள்

/

பொன்மொழி கேளாயோ

/

பொன்மொழி கேளாயோ

பொன்மொழி கேளாயோ

பொன்மொழி கேளாயோ


ADDED : செப் 02, 2011 11:33 AM

Google News

ADDED : செப் 02, 2011 11:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாம் வழங்கும் இனிய பொன்மொழிகளைக் கேட்போமா!

* தனிமனிதனின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. சமுதாயத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது. இவ்விரண்டிற்குமிடையில் இணக்கமும் நடுநிலையும் வேண்டும்.

* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறைநேசத்திற்கு உரியவர்.

* அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.

* இறைவன் ஒருவனே. அவனே அகிலத்தையும், அகிலத்தாரையும் படைத்தான். எனவே, அனைத்து நாடுகளும், அனைத்து மனிதர்களும் சமமே. இறைவனின் வழிகாட்டுதலும் அனைவருக்கும் பொதுவானதே.

* (இறைவனின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால், கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்று விடுவார்கள்.

* திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றனர். மேலும், வீணானவற்றை விட்டு விலகியிருக்கின்றார்கள்.

* இறைவன் அருளிய உணவை உண்ணுங்கள், பருகுங்கள்; ஆனால் பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்.






      Dinamalar
      Follow us