sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

ஆணை வந்தது

/

ஆணை வந்தது

ஆணை வந்தது

ஆணை வந்தது


ADDED : பிப் 13, 2025 11:52 AM

Google News

ADDED : பிப் 13, 2025 11:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருமுறை வெள்ளம் வந்தபோது மனிதர்கள், விலங்குகள் கப்பலில் பயணித்தனர். அவர்களின் கழிவுகளால் கப்பல் அசுத்தம் ஆனது. இதை போக்க நபி ஹஜ்ரத் நுாஹ் முறையிட்ட போது, 'யானையின் நெற்றியை தடவு' என இறை ஆணை வந்தது. அப்படியே அவர் செய்ய இரு பன்றிகள் தோன்றின. அது கப்பலை சுத்தம் செய்தன.

அதன்பின் எலிகள் இனப்பெருக்கம் செய்ததால் அதன் எண்ணிக்கை பெருகியது. இறை ஆணைப்படி சிங்கத்தின் இரு புருவங்களுக்கு இடையே நுாஹ் தடவினார். ஒரு ஜோடி பூனை வெளிப்பட்டு கப்பலில் இருந்த அத்தனை எலிகளையும் துவம்சம் செய்தன. இப்படியே இரண்டு மாதமாக கப்பல் பயணம் தொடர்ந்தது. இதற்கிடையே இறை நிராகரிப்பாளர்களான காபிர்கள் வெள்ளத்தில் மூழ்கினர். எல்லாம் இறைவன் ஆணைப்படியே நடக்கிறது என்பதை உணர்ந்தார். மழை நின்றது.

சில நாளில் வெள்ளமும் வடிந்தது. 'ஜூதி' மலைக்கு அருகில் போய் கப்பல் நின்றது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை அறிய காகத்தை அனுப்பி வைத்தார் நுாஹ். அழுகிக் கிடந்த பிணங்களை (காபிர்களின் உடல்கள்) கண்ட காகம் சாப்பிடத் தொடங்கியது. தனக்கு தரப்பட்ட பணியை மறந்ததால் காகத்தின் மீது கோபம் கொண்ட நுாஹ் அதற்கு சாபம் கொடுத்தார்.

பின்னர் புறாவை அனுப்பினார். அது உற்சாகத்துடன் சென்று வந்து செய்தியை சொன்னது. மகிழ்ச்சியுடன் அவர் அதற்காக துஆ (பிரார்த்தனை) செய்தார்.






      Dinamalar
      Follow us