ADDED : ஜூன் 14, 2024 01:14 PM

அ நிறம் | அளவு
'உங்கள் மீது ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது. எனவே ஹஜ் செய்யுங்கள்' என்றார் நபிகள் நாயகம். இதைக் கேட்ட ஒருவர், 'துாதரே! ஒவ்வொரு ஆண்டுமா ஹஜ் கடமை?' என மூன்று முறை கேட்டார்.
சிறிது நேரம் மவுனத்திற்கு பிறகு, 'அது ஒவ்வொரு ஆண்டும் கடமையாவது மட்டுமல்ல. ஹஜ் செய்வது முந்திய பாவங்களை அழிக்கும்.
இந்த பயணத்திற்கு செலவு செய்வது இறைவழிப் பாதையில் ஏழுநுாறு மடங்கு செலவு செய்ததற்குச் சமம். ஹஜ் யாத்திரை, உம்ரா(காபா யாத்திரை) ஆகிய இரண்டையும் தவறாமல் பின்பற்றுங்கள். தங்கம், வெள்ளி, இரும்பிலுள்ள அழுக்குகளை நெருப்பு போக்குவது போல இதன் மூலம் ஏழ்மை, பாவத்தை போக்கும். ஹஜ், உம்ரா செய்பவர்கள் பிரார்த்தனை செய்தால் உடனே ஏற்கப்படும். பாவமன்னிப்பு கோரினால் மன்னிப்பு கிடைக்கும்' என்றார்.
