sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

ஒழுக்கம் உயர்வு தரும்

/

ஒழுக்கம் உயர்வு தரும்

ஒழுக்கம் உயர்வு தரும்

ஒழுக்கம் உயர்வு தரும்


ADDED : மே 08, 2022 04:45 PM

Google News

ADDED : மே 08, 2022 04:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நசீம் அகமத் நன்றாக படிக்கும் மாணவன். உடல்நலக்குறைவால் படிக்காமல்

தேர்விற்கு சென்றான். வினாத்தாளும் கொடுக்கப்பட்டது. உடனே புத்தகத்தில் கிழித்து எடுத்து வந்த பக்கத்தை பார்த்து விடை எழுத ஆரம்பித்தான். அதைப் பார்த்த ஆசிரியர், ''டேய்... நீயா இது மாதிரியான செயலை செய்கிறாய். உன்மேல் வைத்திருந்த மதிப்பே போய்விட்டது. ஏன் இப்படி செய்தாய்'' என கோபப்பட்டார்.

''சார். நேற்று எனக்கு காய்ச்சலாக இருந்ததால் படிக்க முடியவில்லை. இருந்தாலும் என் மனம் கேட்கவில்லை. அதிக மதிப்பெண் வாங்கவே இப்படி செய்தேன்'' என்றான்.

''மதிப்பெண் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. இந்த தேர்வு இல்லைன்னா என்ன. அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கலாம். அதற்காக உன்னை நீயே ஏமாற்றலாமா... படிப்பை விட ஒழுக்கம்தான் முக்கியம். படிப்பு இல்லையெனினும் ஒருவன் ஒழுக்கமாக இருந்தால், அதுவே அவனைக் காப்பாற்றும்'' என வருத்தப்பட்டு கூறினார்.

''சார். என்னை மன்னித்துவிடுங்கள். இனி தவறு செய்யமாட்டேன்'' என உறுதியளித்தான். அதுமட்டும் இல்லை. தான் கொண்டு வந்த பேப்பரை கிழித்ததுடன், முன்பு பார்த்து எழுதிய விடைகளையும் அடித்தான்.

தனக்கு தெரிந்ததை மட்டும் எழுதி தேர்ச்சி பெற்றான். அகமத் படிப்பில் முதல் ரேங்க் வாங்காவிட்டாலும் ஒழுக்கத்தில் முதல் மதிப்பெண் பெற்றான்.






      Dinamalar
      Follow us